TamilsGuide

பேராதனை பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பல்கலைக்கழக மாணவர் நிலையத்திலிருந்து இன்று (31) எதிர்ப்பு ஊர்வலம் ஆரம்பமானது.

வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய முடியாது, அநியாயமாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக கைவிட வேண்டும், அடக்குமுறையை நிறுத்த வேண்டும், அனைத்து கல்வி நலன் சார்ந்த பிரச்னைகளையும் உடனடியாக தீர்க்க வேண்டும், இலவச கல்வி வாய்ப்புகளை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment