TamilsGuide

பெலியத்தை படுகொலை சம்பவம் - மேலும் மூவர் கைது

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, அலவ்வ மற்றும் புஸ்ஸ ஆகிய பகுதிகளை சேர்ந்த 28, 42 மற்றும் 58 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்தியமை மற்றும் குற்றச் செயல்களின் போது பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களிலேயே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment