TamilsGuide

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான புதிய அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகக் கட்டுப்பாட்டினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இதற்காக விரைவில் புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அறிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சட்டத்தின் கீழ் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோரின் வாழ்க்கைப் பாதுகாப்பிற்குத் தேவையான புதிய விதிமுறைகளுடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களைக் காப்பாற்றும் வகையில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆட்களை ஈடுபடுத்தும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment