TamilsGuide

அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய லொஹான் ரத்வத்தவிற்கு புதிய அமைச்சு பதவி 

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் லொஹான் ரத்வத்த பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மது போதையில் தனது நண்பர்களுடன் குழுவாக வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2021 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியை அவர் இராஜினாமா செய்திருந்தார்.

சிறைக்குள் ஆயுதங்களை கொண்டு சென்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சராக அன்றிருந்த சரத் வீரசேகர கூறியிருந்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 

Leave a comment

Comment