TamilsGuide

தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தனர்.

அத்துடன் இந்த விசாரணை எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment