TamilsGuide

நெல்லுக்காண நிர்ணய விலை - கிளி. விவசாயிகள் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றையும் இன்று கையளித்துள்ளனர்.

நெல்லுக்காண நிர்ணய விலை இல்லாமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால், கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்திற்கு அரசாங்கம் உரியத் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான மகஜர் ஒன்றையும் அவர்கள் இன்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
 

Leave a comment

Comment