இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஒரு ஜனநாயக ரீதியான உரையாடல் ஊடாகவும் ஜனநாயக ரீதியான செயல்முறையின் ஊடாகவும் முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.