TamilsGuide

சீனி இறக்குமதியில் மோசடி - நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிதிப்பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

நிதியமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறைக்கப்பட்ட வரி விகிதத்தை நியாயமற்ற வகையில் பாரிய நிறுவனங்கள் அனுகூலம் பெறுவதற்கு இடமளித்தமையை தடுப்பதற்கு எந்தவொரு பொறுப்புக்கூறும் முறைமையும் செயற்படுத்தப்படவில்லை எனவும் குறித்த குழு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment