TamilsGuide

மாணவருக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் நிதியுதவி 

திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத்  தெரிவாகிய, தந்தையை இழந்த மாணவருக்கும்   படிப்பைத் தொடரப்  பணவசதி அற்ற மாணவருக்குமாக மொத்தம்  65 மாணவருக்கு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் 2024/01/14 ஆம் நாளாகிய இன்று 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்துக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன், துணைத் தலைவர் மரு.நாகரத்தினம் சரவணபவன், பொருளாளர் திரு. இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இதற்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இதற்கான  நிதி உதவியைக்  கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment