TamilsGuide

தாதியர்கள் 24 மணித்தியால போராட்டம்

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு வலியுறுத்தி  ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று காலை 6.30 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

எனினும், நேற்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்காத தாதியர்கள் இன்று காலை 7 மணிமுதல் 24 மணித்தியால பணிப்பறுக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளர்கள் இதனால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதேநேரம் நிதி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பவற்றுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்திருந்தன.
 

Leave a comment

Comment