TamilsGuide

நாட்டில் காற்றின் தரம் குறைவு - மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment