TamilsGuide

மயிலத்தமடு-மாதவனை பண்ணையாளர்கள் போராட்டம்

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று (செவ்வாய்கிழமை) போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள், மத தலைவர்கள், சமூக அமைப்புக்கள் என பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஓர் அமைதி வழி போராட்டமாகவும் மற்றும் நடை பவனியாக இந்த போடாட்டம் இடம்பெற்றதுடன் நியாயமான கோரிக்கைகளுக்கான தீர்வுகள் இதுவரையில் வழங்கபடாமையினால் மிகவும் பாரிய பிரச்சனைகளை அவர்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.

மேலும் இவ் போரட்டத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment