TamilsGuide

யாழில். மாவாவுடன் இளம்பெண் கைது

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றச் சாட்டில் துன்னாலையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment