TamilsGuide

ஜனாதிபதியை பிறிதொரு இடத்திற்கு சென்று சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – நல்லை ஆதீனம்

நல்லை ஆதீன குருமுதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவையில்லை என ஆதீனத்தின் செயலாளர் ஆறுதிருமுருகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (06..1.24) சர்வமத தலைவர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசபந்த பராமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பில் ஆதீன செயலாளர் ஆறுதிருமுருகனிடம் கேட்ட போதே   இதனை வலியுறுத்தி உள்ளார்.
 

Leave a comment

Comment