TamilsGuide

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக திருகோணமலையில் ஜல்லிக்கட்டு போட்டி

பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரபலமானது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு அமைந்துள்ளதாக கருதப்படும்.

உலகமெங்கும் தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இலங்கையில் ஜல்லிக்கட்டு போன்றவை இதுவரை நடத்தப்பட்டது இல்லை.

இந்த நிலையில் திருகோணமலையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் வழிகாட்டுதலில் போட்டியை நடத்த முயற்சி மேற்கொண்டனர். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. வாடிவாசல் வழியாக காளைகளை சீறிப்பாய, மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர்.

சிறந்த மாடுகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

200 காளைகள் வாடிவாசல் வழியாக சீறப்பாய இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போட்டியை செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய எம்.பி. சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 

Leave a comment

Comment