TamilsGuide

நான் மலேசியா சென்றால் என்னைத் தரையில் இறங்கவிடாத தங்கம்

டத்தோஸ்ரீ சரவணன்
மலேசிய முன்னாள் அமைச்சர்
இந்நாள் 
நாடாளுமன்ற உறுப்பினர்

மலேசிய இந்தியரிடையே
சொல்வாக்கும் செல்வாக்கும் 
மிக்க சுந்தரன்

நான் மலேசியா சென்றால்
என்னைத் தரையில்
இறங்கவிடாத தங்கம்

என்னையும் என் தமிழையும்
ஆவலோடு காவல்காக்கும்
சிங்கம்

மகா கவிதை
பெறுவதற்காகவே
பெருங்காதலோடு
பெசன்ட் நகர் வந்தார்

தேநீர் வருமுன்னே
சில பக்கங்கள் படித்து
ஓங்கிய குரலெடுத்து ஓதினார்

உவப்பத் தலைக்கூடி 
உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

#மகாகவிதை | #MakaKavithai 

-வைரமுத்து
 

Leave a comment

Comment