TamilsGuide

வவுனியாவில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்தமையினால் இன்று அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது

இந்த சம்பவத்தையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்திருந்த நிலையில், வவுனியா நகரசபை மண்டபத்தில் வன்னி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment

Comment