TamilsGuide

யாழில் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

யாழில் நேற்றைய தினம் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டியொருவர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு வட்டுக்கோட்டைப்  பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment