TamilsGuide

விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

விவசாயிகளுக்கான உரக் கொடுப்பனவின் நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 2,000 மில்லியன் ரூபாயைத்  திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நிதி கிடைத்ததும் உடனடியாக அதனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதன்மூலம் 583,372 விவசாயிகள் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 50 வீதமானோருக்கு மாத்திரமே இதுவரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment