TamilsGuide

கனடா இஞ்சினியர் என நம்பி மோசம்போன யுவதி - வலைவீசி தேடும் பொலிஸார்

கொழும்பு – ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை , கனடாவில் வசிப்பவர் என கூறி திருமண ஆசைகாட்டி மோசம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அத்துடன் யுவதியிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை குறித்த நபர் மோசடி செய்ததாக கூறிய பொலிஸார் சந்தேக நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சந்தேக நபர் தன்னை, கனடாவில் வசிக்கும் மென்பொருள் பொறியியலாளர் என்றும் என்றும் அறிமுகப்படுத்தியதால், தனது தாயார் தான் வாங்கிய இரண்டு மாடி வீட்டில் குறித்த நபரை தங்க யுவதி அனுமதித்துள்ளார்.

அதோடு அவரின் வங்கி பரிவர்த்தனைகளுக்காக யுவதி வங்கி கணக்கை தொடங்கியதாகவும் , அவர் பல சந்தர்ப்பங்களில் மேலும் பெண்ணிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை பொய்யான காரணங்களின் கீழ் கடனாக பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனது மனைவியை தனது சகோதரி என அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட யுவதி முறைப்பாட்டாளருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியதாகவும் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க தலையில் போலி முடி அணிந்திருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் யுவதியை ஏமாற்ரிய நபரி பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றதாக கூறப்படுகின்றது.
 

Leave a comment

Comment