TamilsGuide

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஆராதனை

யாழ் மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் இன்றைய தினம் (25.12.2023) கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தினால் யாழ் மரியண்ணை பேராலயத்தில் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

நத்தார் விசேட திருப்பலி நிகழ்வில் யாழ் மறை மாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர், மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 

Leave a comment

Comment