TamilsGuide

உயர்தரப் பரீட்சை தொடர்பான செயலமர்வுகளுக்கு தடை

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment