TamilsGuide

பெலாரஸில் உயிரிழந்த வட்டக்கச்சி குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று

பெலாரஸின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.

பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் பெலாரஸின் எல்லையில் வைத்து கடந்த 9 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது சடலம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிச் சடங்குகள்  இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment