TamilsGuide

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அம்பியூலன்ஸ் சாரதிகள்

மத்திய மாகாணத்தில் உள்ள அம்பியூலன்ஸ் சாரதிகள் நாளையும்(18) நாளை மறுதினமும் (19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment