TamilsGuide

வாழ்த்துரை வழங்க வருகைதரும் கலைஞானி கமல்ஹாசன் 

மகா கவிதை
வெளியீட்டு விழாவில்
வாழ்த்துரை வழங்க வருகைதரும்
கலைஞானி 
கமல்ஹாசனைச் சந்தித்து
அழைப்பிதழும் நூலும் வழங்கினேன்

எனக்கும் அவருக்கும்
இடையிலிருந்த நாற்காலியில்
42ஆண்டு நினைவுகள்
அமர்ந்திருந்தன

கலை அரசியல் மதம் என்று
தவளைக்கல்லாய்த் தாவித்தாவி
எண்ணூர்
எண்ணெய்ப் பிசுக்கில்
இடறி நின்றது உரையாடல்

குடிதண்ணீர்
எண்ணெய் ஆவதும்
எண்ணெய்
தண்ணீரின் ஆடையாவதும்

காலங்காலமாய்க் 
கழுவப்படாத
கண்ணீர்ப் பிசுக்கில்
எண்ணெய்ப் பிசுக்கும்
ஏறி நிற்பதும்

மீனென்ற 
வேட்டைப் பொருளும்
கொக்கென்ற 
வேட்டையாடு பொருளும்
சேர்ந்து செத்து மிதப்பதும்

நதி இறங்க 
வழியில்லாத கடலில்
எண்ணெய் இறங்குவதும்

உழைக்கும் மக்கள்
பிழைக்க வழியின்றிப்
பெருந்துயர் கொள்வதும் 

எத்துணை கொடுமையென்று
சோகம் பகிர்ந்தோம்

‘இதற்கு யார் பொறுப்பு’
என்றார் கமல்

‘லாபம் ஈட்டும்
நிறுவனம்’ என்றேன்

காஃபி கொடுத்தார்
பாதிக்குமேல் என்னால் 
பருகமுடியவில்லை
 

Leave a comment

Comment