TamilsGuide

காசல்ரீ நீர்த்தேக்கம் முழுக் கொள்ளவை எட்டியது - மக்களுக்கு எச்சரிக்கை

கடந்த சில நாடகளாக பெய்த மழையை தொடர்ந்து நேற்று 16.12.2023 இரவு காசல்றீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள 14 தாணியங்கி வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று காலை வரை சுமார் 6 அங்குலம் வரையான நீர் இந்த வான் கதவுகள் ஊடாக நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறியதாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கடமை நேர உத்தியோகத்தர் தெரிவித்தார்.

தற்போது மழை குறைவடைந்து சீரான வானிலை காணப்படுவதுடன் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவும் சுமார் 1 தொடக்கம் 2 அங்குலமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment