TamilsGuide

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

தற்பொழுது நிலவும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளம் தனது நீர்மட்டமான 26 அடைவு மட்டத்தை விட 27.1 அடியாக உயர்ந்துள்ளது.

அத்துடன், தற்பொழுது குறித்த குளத்தின் மேலதிக 8″ வரை வான்பாய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இக்குளத்தின் நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என நீர்ப்பாசன திணைக்களத்தினர் அறிவுறுத்துகின்றனர்.
 

Leave a comment

Comment