TamilsGuide

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை தனியாருக்கு  விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளமை, 20,000 ரூபாய்  சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில், ஒன்றினைந்த தபால் தொழிற்சங்கங்களினால் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் குறித்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே வவுனியா  அஞ்சல் அலுவலக ஊழியர்களால்  பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.
 

Leave a comment

Comment