TamilsGuide

பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே 58 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த நபரை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a comment

Comment