TamilsGuide

மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு 

கண்டி கடுகன்னாவை வைத்தியசாலையில் மதில் இடிந்து வீழ்ந்ததில் உடுநுவர பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் பழைய மதிலின் புனர்நிர்மாணப் பணிகளின் போது அது இடிந்து வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கண்டி மாவட்ட இடர் முகாமைத்துவ உதவி பணிப்பாளர் இந்திக ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சடலம் கடுகன்னாவை – ஹேனாவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வெல்லம்பிட்டி – வேரகொட வித்தியாலயத்தில், மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment