TamilsGuide

சென்னை வெள்ளம் நிவாரணத்திற்கு பெரிய தொகை வழங்கும் சூர்யா, கார்த்தி

தற்போது மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் தற்போது சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து இருக்கிறது. நடிகர் விஷால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், மாநகராட்சி பல ஆயிரம் கோடி செலவு செய்த மழைநீர் வடிகால் என்ன ஆனது என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
  

இந்நிலையில் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 10 லட்சம் ருபாய் தருவதாக அறிவித்து இருக்கின்றனர்.

அவர்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக அந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க இருக்கின்றனர். 
 

Leave a comment

Comment