TamilsGuide

சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த சிறுவன் சாதனை

2023ம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியிலேயே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment