TamilsGuide

இறைச்சி நுகர்வினை குறைத்துக்கொள்ளும் கனடிய மக்கள்

கனடிய மக்கள் இறைச்சி நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளது. விலை மாற்றம், உணவுப் பொருள் கொள்வனவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  
கடந்த காலங்களில் தாரளமாக இறைச்சி வகைகளை கொள்வனவு செய்த மக்கள், தற்பொழுது நுகர்வினைக் குறைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் நுகர்வோர் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

பொருளியல் ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பினால் புரதச் சத்து செறிந்த இறைச்சி வகைகள் கொள்வனவை கனடியர்கள் வரையறுத்துக் கொண்டுள்ளனர்.

போசாக்கானதும், தரமானதுமான உணவு வகைகளை விடவும் குறைந்த செலவில் கூடுதல் அளவான உணவுப் பொருட் கொள்வனவு குறித்து நுகர்வோர் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment