TamilsGuide

சந்திரிகாவிற்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவி வழங்குவது தொடர்பில் தற்போது கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலதிகமாக, திருமதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு உயர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சந்திரிகா குமாரதுங்கவிற்கு அறிவிப்பு

இது குறித்து சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான பதவியை திருமதி குமாரதுங்கவுக்கு வழங்கும் வகையில் கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு, கட்சியின் மத்திய குழுவில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.
 

Leave a comment

Comment