TamilsGuide

ஹந்தானயில் சிக்கியிருந்த 180பேர் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கபபட்டுள்ளன.

குறித்த மாணவர்கள் ராகம மருத்துவ பீட மாணவர்கள் என்றும் அவர்கள் மோசமான வானிலை காரணமாக நேற்றைய தினம் அங்கு சிக்குண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுளது.

இன்னிலையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment