TamilsGuide

யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று முன்தினம் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இதன் போது குறித்த நபரிடமிருந்து  480 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment