TamilsGuide

யாழில் 480 உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்தில், தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 480 உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே குறித்த உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment

Comment