TamilsGuide

தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின் தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திடம் கையளித்துள்ளனர்.

சுமந்திரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து, சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேநேரம், சிறிதரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து குருகுலராஜா, வேழமாலிகிதன், விஜகுமார், உள்ளிட்ட 6 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது, திருகோணமலையில் இடமபெறும் அடுத்த பொதுச்சபை கூட்டத்தில் தலைவர் தெரிவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
 

Leave a comment

Comment