TamilsGuide

க.பொ.த. சாதாரணதர பரீட்சை - யாழ்.வேம்படி மாணவி சாதனை

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 13,588 மாணவர்கள் 9 பாடங்களுக்கும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள மஹாமாய பெண்கள் பாடசாலை மாணவியொருவர், நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 72.02% மாணவர்கள் க.பொ.த. உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment