TamilsGuide

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் விபத்து-30 பேர் காயம்

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் இன்று பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

இதேவேளை காயமடைந்தவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது 
 

Leave a comment

Comment