TamilsGuide

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழில் சுமார் 34 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப்  பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்து  இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment