TamilsGuide

யாழ்.நோக்கிச் சென்ற பேருந்துக்கள் மீது கல் வீச்சு

யாழ்.நோக்கிப் பயணித்த மூன்று பேருந்துகள் மீது நேற்றிரவு அநுராதபுர பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சிலரால் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள் இரண்டு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதல் நடத்திய நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலினால் பேருந்துக்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள நிலையில், இது குறித்து  பேருந்துக்களின் சாரதிகளால் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment