TamilsGuide

இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நாடு திரும்பியுள்ள அவரை நீதிமன்ற உத்தரவுப்படி 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என குடிவரவு திணைக்களம் அவருக்கு அறிவித்துள்ளது.

Leave a comment

Comment