TamilsGuide

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு நாட்டுப்படகின் மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 3.5 கிலோகிராம் தங்கக் கட்டிகளை திருச்சி சுங்தத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பாம்பன் கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கையிலிருந்து சந்தேகத்துக்கு இடமாக நாட்டுப் படகொன்று வருவதை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த படகை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிக்க முற்பட்ட போது, படகை விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த படகை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் படகில் இருந்த 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment