TamilsGuide

25 நிமிடம் லிப்ட்டுக்குள் சிக்கிய அமைச்சர்

கண்டி மாவட்ட செயலகத்தில் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ஷ மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் மின்தூக்கியினுள் சிக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் மூவரும் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் பிரயத்தனத்துடன் அவர்களை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
 

Leave a comment

Comment