TamilsGuide

வீட்டுக்குள் நுழைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதாரப் பரிசோதகர்

சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தனது வீட்டுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்த நபரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் சோயாவீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது திருடன் கத்தியால் தாக்கியதில் சுகாதாரபரிசோதகருக்கும், அவரது  சகோதரரான ஊடகவியலாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் மீது நீதிமன்றில் வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment