TamilsGuide

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்றயதினம் மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்று மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வள்ளி, தேவசேனாவுடன் கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார்.

இதன்போது ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வலம்வந்தார்.
 

Leave a comment

Comment