TamilsGuide

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தனுஷ்கோடியில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குறித்த ஏழு பேரும் மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடியை அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 7 பேரையும் மீட்டுள்ள தமிழக பொலிஸார் அவர்களை மண்டபம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment