TamilsGuide

கார்த்திகை வாசம்

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் "கார்த்திகை வாசம்" என்ற பெயரில் நடத்திவரும் மலர் கண்காட்சி கடந்த (22) ஆம் திகதி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது

தமிழ்த் தேசியப் பசுமை இயங்கத்தின் ஏற்பாட்டில் தாவர உற்பத்தியாளர்களும் இணைந்து நடாத்தும் இக்கண்காட்சி, இந்த மாதம் 30ஆம் திகதி வரை தினமும் காலை 8:30 மணி தொடக்கம் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது.

இங்கு  பூ மரங்கள், பயன்தரு மரங்கள், வீட்டுத்தோட்ட காய்கறி மரங்கள், பசளைகள் என்பன விற்பனை செய்யப்படுகிறது
 

Leave a comment

Comment