TamilsGuide

குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு விற்கும் வர்த்தகம் - CID விசாரணை தீவிரம்

கண்டி பிரதேசத்தில் செயற்படும் ஆட்கடத்தல் குழுவொன்று தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாட்டு பிரஜைகளுக்கு வளர்ப்பதற்காக குழந்தைகளை விற்பனை செய்யும் வகையில் இந்த குழு செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே பிரஜை ஒருவரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவூட்டியுள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பித்து, சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a comment

Comment